Wednesday, July 8, 2009

பூரண வாழ்வு.

என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஜென் கதையினை இந்த தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உளமகிழ்ச்சி அடைகிறேன்.

சான்-சி ஒரு மிகவும் ஆனந்தமான மனிதர். அவர் ஒருநாள் தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு ஒரு பூஞ்சோலை வழியாக சென்றுகொண்டு இருந்தார். அப்பொழுது அங்கே சில சிறுவர்,சிறுமியர்கள் கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.சான்-சியும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்துகொண்டார்.

லீ-மிச்சி என்ற சிறுமி தனது சுற்றுக்காக கண்களை மூடிகொண்டி ஒன்று முதல் பத்துவரை எண்ண ஆரம்பித்தாள்.எல்லோரும் தனது பங்குக்கு மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டனர்.சான்-சியும் ஒரு பூச்செடிக்கு பின்னால் மறைவாக ஒளிந்துகொண்டார்.லி-மிச்சி எல்லோரையும் கண்டுபிடித்துவிட்டாள், ஆனால் சான்-சியை மட்டும் அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.பொழுது சாய்ந்துவிட்டதால் குழந்தைகள் விளையாட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் குழந்தைகள் மீண்டும் விளையாடவந்தனர்,
லீ-மிச்சி தன் சுற்றுக்கு இந்தமுறையும் கண்களை மூடி எண்களைவாய்விட்டு எண்ண ஆரம்பித்தால், குழந்தைகள் எல்லோரும் மீண்டும் ஒளிந்துகொண்டனர்.லீ-மிச்சி எல்லோரையும் கண்டுபிடிக்க புறப்பட்டால், அப்பொழுது பூச்செடிக்கு பின்னால் மறைந்து இருந்த சான்-சி ஐ கண்ண்டுபிடித்து முதுகில் தட்டினால், சான்-சி கண்டுபிடிக்கப்பட்ட கணத்தில் "நான் மாட்டிகிட்டேன் !! நான் மாட்டிகிட்டேன் " என்று ஆனதத்தில் துள்ளி குதித்தார், பரவசத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தார்......

இதில் விந்தை என்னவென்றல் அவர் நேற்றில் இருந்து லீ-மிச்சி எதிர்பார்த்து அதே இடத்தில் இப்பொழுதுவரை ஒளிந்து இருந்தார்.கணத்துக்கு கணம் முழு ஆவலோடு அவளை எதிர்பார்த்து இருந்தார்,

சான்-சி ன் இந்த கள்ளமில்லா தன்மைக்கு, வாழ்வின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு முன்னே உலகின் அதிபுத்திசாலிதனமும், மேதமை அறிவும் எள்ளலளவும் ஒப்பிடமுடியாமல் வெகுதொலைவில் பின்னுக்கு நின்றுவிடுகிறது. . சான்-சி வாழ்வை முழுமையாக ஆவலுடன் காத்து இருந்து நேசிக்கிறார்.

சான்-சி ஐ போல வாழ்வதே " ஜெனில்வாழ்வதாகும்".
இதுவே பூரணவாழ்வாகும்.

மிக்க அன்புடன்,
சாய் சுதாகர்,

1 comment:

  1. nice story with the finishing of involvement and love with their existance and life that is too far from knowledge and intelligence. It gives a good impression regarding our existance and our life.

    ReplyDelete